திருச்சிராப்பள்ளி, ஆக.30- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க திருச்சி மாவட்ட 4-வது மாநாடு மணப்பாறையில் வெள்ளியன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் சந்தியாகு ஏற்றினார். மாநாட்டில் மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட தலைவர் வரதரா ஜன், வி.ச.மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர்கள் மணப்பாறை ராஜகோபால், மருங்காபுரி தியாகராஜன், வையம்பட்டி வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில், பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ40ம், எருமை பாலுக்கு ரூ50ம் உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலை தினசரி 50 லட்சம் லிட்டராக அதிகரிக்க வேண்டும். கால்நடை தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24, 25, 26-ம் தேதிகளில் கறவை மாடுகளுடன் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய தலைவராக என்.கோபாலகிரு ஷ்ணன், செயலாளராக பி.ராமநாதன், பொருளாளராக ஆர்.குமார், துணைத் தலைவர்களாக பி.வரதராஜன், ஆர்.கோவிந்தசாமி, துணை செயலாளர்களாக டி.தங்கராசு, திருநாவுக்கரசு ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர். மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி நிறைவுரையாற்றினார். முன்னதாக மணப்பாறை வி.ச.ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். வி.தொ.ச.மணப்பாறை வட்ட செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.