tamilnadu

காவிரி, வைகை, குண்டாறு திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு: சிபிஎம் பாராட்டு

அனைத்துப் பகுதிகளுக்கும் செயல்படுத்தக் கோரிக்கை

புதுக்கோட்டை, பிப்.14- காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பட் ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.  இதுகுறித்து கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள அறிக்கை:   காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்து மாநாடுகளிலும் இத்திட்டத்தை நிறை வேற்றக்கோரி முதன்மையான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர், வாலிபர், மாதர், மாணவர் உள்ளிட்ட  வர்க்க, வெகுஜன அரங்கங்களும் இக்கோரிக்கைக ளை வலியுறுத்தி தொடர்ச்சியான போ ராட்டங்களை நடத்தி வந்துள்ளது. தொடர்ச்சியான பேராட்டத்தின் விளைவாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.7,677 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீட்டை தமிழக அரசு தயாரித்துள் ளது. மேலும், வெள்ளிக்கிழமை நடை பெற்ற பட்ஜெட் கூட்டத்தில் தமிழக அரசு ரூ.700 கோடி நிதியும் ஓதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசின் இத்த கைய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு நன்றியும், பாராட்டு தலையும் தெரிவித்துக்கொள்கிறது.

அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துக!

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப் பட்டப் பட்டால் புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும் எனவும், குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பயனடை யும் என்பதுதான் அரசின் வாக்குறுதி யாகவும், மாவட்ட மக்களின் எதிர் பார்ப்புமாக இருந்தது. ஆனால், தற்பொழுது திட்ட மதிப்பீட்டுக்கான வரைபடத்தைப் பார்க்கும் போது மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. பிரான வாய்க்கால் வந்த பிறகு கிளை வாய்க்கால் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என மாவட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரி கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வாய்க்கால் அமைக்கும்போதே, கிளை வாய்க்காலுக்கான வழித் தடத்திற்கும் சேர்த்தே திட்ட மதிப்பீடு தயாரிப்பதே சரியான நடவடிக்கை யாக இருக்கும். அப்படி இல்லா விட்டால் கிளை வாய்க்கால் அமைக்கும் பணி மேலும் பல ஆண்டுகளுக்கு கிடப்பில் போடப் படும் நிலை உருவாகும். மாவட்டத்தின் பெரும்பகுதியான பகுதிகள் இத்திட்டத்திலிருந்து தொ டர்ந்து புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிக ளுக்கும் சேர்த்தே செயல்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்து கிறோம். இவ்வாறு அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.