tamilnadu

img

பட்டா வழங்கக் கோரி 40 குடும்பத்தினர் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 22- திருச்சி ஆட்சியர் கூட்டரங்கில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செந்தண் ணீர்புரம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் டிஆர்ஓ சாந்தியிடம் கொடுத்த மனுவில், அரியமங்கலம் கோட்டம் 27வது வார்டு செந்தண்ணீர்புரம் வட பகுதியில் உள்ள கண்ணகி தெருவில் 60 வருடங்களாக குடியிருந்து வரும் 40 வீடுகளுக்கு எல்லா விதமான ஆவ ணங்கள் இருந்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை. ஆகையால் கண்ணகி தெருவில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.  டிஆர்ஓ சாந்தியிடம் மனுவை கொடுத்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செய லாளர் லெனின், செந்தண்ணீர்புரம் குடியிருப்போர் நல சங்க கௌரவ தலைவர் அமீன், துணை தலைவர்கள் வெங்கடேசன், பாலசுப்ரமணியன், துணை செயலாளர்கள் கலியமூர்த்தி, மனோகரன், ஆலோசகர் ராமசுவாமி, ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், அப் துல்கனி ஆகியோர் உடனிருந்தனர்.

;