tamilnadu

img

பண மோசடி வழக்கில் 2 பேர் கைது

புதுக்கோட்டை, பிப்.14- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்க லத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறு வனத்தின் பெயரில் சிலர் டோக்கன் கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டுள் ளதை அறிந்த சம்பந்தப்பட்ட நிறுவ னத்தின் ஊழியர்கள், மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தங்களுக்கும் ஒரு ஸ்கூட்டி வேண்டும் என்று இதமாக பேசி அவர்கள் கேட்ட ரூ. 5 ஆயிரம் பணம் தருவதாக கூறி கீரமங்கலம் வரவைத்து விசாரனை செய்துள்ளனர்.  மோசடியில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா ஆவணம் பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்த கனி (35). அ.தி.மு.க சிறு பான்மைப் பிரிவு ஒன்றியச் செயலா ளர் மற்றும் அவருடன் மோடியில் ஈடு பட்ட துலுக்கவிடுதி சந்திரன் (40) ஆகிய இருவரும் கீரமங்கலம் அழைத்து வரப் பட்டனர். அப்போது அவர்களிடம் நாக பட்டிணம் தொகுதி எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி வழங்கும் ஸ்கூட்டிகளுக்காண டோக்கன் இருந்துள்ளது. மேலும் அந்த டோக்கனில் கும்ப கோணம் தொழிலதிபர் அன்சாரி இல்ல திருமணம் ஆவணம் பெரியநாயகி புரத்தில் நடக்கிறது. இதில் 31 பேருக்கு நாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு ஸ்கூட்டிகளை வழங்குகிறார்.

இந்த ஸ்கூட்டிகள் கீரமங்கலத்தில் ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை மையத்தில் வாங்கப்படுகிறது என்று இருந்தது.  இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது.. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் திருமணத்திற்காக தயாராக உள்ள ஏழை மக்களை கண்டறிந்து அவர்க ளிடம் பேசி இலவசமாக ஸ்கூட்டி கொடுக்கிறார்கள். அதற்கான டோக்கன் கையோடு கொண்டு வந்திருக்கிறோம். மார்ச் 5ஆம் தேதி ஸ்கூட்டி கிடைக்கும். அதனால் டோக்கனுக்கு ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லி வசூல் செய்து வந்துவிடுவ தும் தெரிய வந்தது. இதே போல பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர். மேலும் ஆவணம் சிவன் கோயிலில் அன்னதானம் வழங்குவதாகவும் நன்கொடை வசூல் செய்துள்ளனர். பொதுமக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக டோக்கனில் பச்சை மையில் கையெழுத்தும் போட்டுள்ள னர். இது குறித்து தங்கள் நிறுவனத்தின் பெயரையும், எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பெயரையும் தவறாக பயன் படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட கனி மற்றும் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தின் நிர்வாகிகள் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இரு வரையும் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்து மேலும் மோசடியில் ஈடு பட்டுள்ளனரா என்று போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.