tamilnadu

ஞாயிறுகளில் ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது

திண்டுக்கல், ஆக.1 ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வற்ற ஊரடங்கு அமலாவதால் ரயில் நிலை யங்களில் உள்ள முன் பதிவு மையங்கள் இயங்காது. இது தொடர்பாக தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-  மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், பழனி, இராஜ பாளையம், திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமி ழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வரவிருக்கிற அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதால் பயணச் சீட்டு முன்பதிவு மையங் கள் ஆகஸ்ட் 2.9.16,23,30 ஆகிய நாட்களில் இயங்காது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.