சின்னாளப்பட்டி, மே 21- இந்திய நாடு முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலை யில் அனைத்துத் தொழில்களும் முடங்கி யுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டையில் பூ வியாபாரத்தை அடுத்து பாத்திரத் தொழில் தான் அதிகம் நடை பெறுகிறது. இங்கு செம்பு, சில்வர் பாத்திரங்கள் செய்யும் பட்டறைகள் அதிகம் உள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை நம்பியே இருக்கின்றனர். தற்போது கொரோனா பாதிப்பால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. இது குறித்து கண் ணன் என்ற தொழிலாளி நம்மிடம் கூறும் போது கடந்த ஆண்டு இந்த சமயத் தில் திருமணங்கள், வளைகாப்பு, சீர் வரிசைகளுக்கென்று அதிகம் பாத்தி ரம் செய்து கொடுத்தோம்.
எங்களுக்கு மொத்த வியாபாரிகள் செம்பை கொடுத்து விடுவார்கள். கடந்த காலத் தில் காலை 10மணிமுதல் மாலை 5 மணி வரை வேலை பார்த்தோம். ஒருநாள் கூலி 500 கொடுப்பார்கள். தற்போது காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை தான் வேலை பார்க்க முடி கிறது. குறைந்தக் கூலியே கிடைக்கிறது. எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவே சிரமப்பட்டு வருகிறோம். அரசாங்கம் எங்களை காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம் என்றார். இங்கு தயாரிக்கப் படும் பாத்திரங்கள் திண்டுக்கல், மதுரை, சேலம் மட்டு மல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் செல்கி றது என்றார். அரசு இவர்களை கவ னிக்குமா? ம.ஹரிஹரன்