tamilnadu

img

சாத்தான்குளம் இரட்டை படுகொலை; பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு வாலிபர் சங்கம் கண்டனம் திண்டுக்கல், தேனி, இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூலை 4- சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கோரியும், பிரன்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்யக் கோரியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்;டம் நடைபெற்றது. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத துணைச் செயலாளர் பாலச்சந்திரபோஸ், மாவட்டத்தலைவர் விஷ்ணுவர்த்தன், நகரச் செயலாளர் கார்த்திக், ஒன்றி யச்செயலாளர் நிருபன்பாசு, ஆகி யோர் கலந்துகொண்டனர். பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைச்செயலா ளர் திருமலை, நகரச்செயலாளர் மாரிக்கண்ணு, பொருளாளர் சுரேஷ், ஒன்றிய துணைச்செயலாளர் முரு கன் ஆகியோர் பங்கேற்றனர்.  தொப்பம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா ளர் இளையபாரதி, காளிமுத்து, தாமுக்கண்ணன், ஆகியோர் பங் கேற்றனர்.  ரெட்டியார்சத்திரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் நந்தகுமார், நாகார்ஜூன், பிரகாஷ், குஜிலியம்பாறையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் சரவணன், குணா ஆகி யோர் பங்கேற்றனர். சாணார்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா ளர் சிலம்பரசன், சத்தியமூர்த்தி, குமார், ஜெயபாண்டி, விஜயகுமார், பிரதீப், வேடசந்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், ஆகி யோர் பங்கேற்றனர்.
தேனி
தேனியில் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் எம்.முத்துக்குமார் தலைமை வகித்தார். தாலுகா செய லாளர் பெத்தலீஸ்வரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் டி.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அரண்மனைப்புதூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் சி.முனீஸ்வரன், எஸ்.கண்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தாலுகா செயலாளர் எம். செல்லப்பாண்டி தலைமை வகித்தார். தாலுகா தலைவர் ஆர்.தங்கப் பாண்டி, நிர்வாகிகள் முனியாண்டி, கருப்பையா, ராதாக்கண்ணன், பிரித்விராஜ், சோலைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கம்பத்தில் வாலிபர் சங்கத்தினர் தங்களின் வீடுகளின்முன் கோரிக்கை பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.ஆர்.லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியகுளம் ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ச.செளந்திர பாண்டியன் தலைமை வகித்தார். தாலுகாத்தலைவர் சி.கே.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் மதன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். சின்னமனூர் ஓடைப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யச்செயலாளர் கே.கரண்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வேல்பிரகாஷ், அருண்குமார் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம்
பெட்ரோல் டீசல் விலை உயர் வைக் கண்டித்து இராமநாதபுரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலா ளர் தட்சிணாமூர்த்தி, தாலுகா செய லாளர், முனியசாமி தாலுகா தலைவர் அழகர் துணைத்தலைவர் தமிழரசன், அழகுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;