tamilnadu

img

கொடைக்கானலில் கஞ்சித்தொட்டி போராட்டம்....

திண்டுக்கல்:
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், டாக்சி ஓட்டுநர்கள், உணவகங்கள்,  விடுதி உரிமையாளர்கள்  வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொடைக்கா னலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நகரம் வெறிச்சோடிக் கிடந்தது. மூஞ்சிக்கல் பகுதியில் மறியல் நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில்  கஞ்சித்தொட்டி போராட்டம் நடைபெற்றது.

;