ஆப்கனில் வெள்ளம் : 300 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரு மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 300 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 1000க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் இடிந்துள்ள தாகவும் கூறியுள்ளது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாக்லான் மாகாணம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவா ரணம் வழங்கி வருவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
கனடாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மிக வேகமாக பரவி வருகிறது. ஆயிரத்து க்கும் அதிகமான மக்கள் தற்போது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். பலமான காற்று வீசுவதால் காட்டுத் தீ பரவும் வேகம் இரு மடங்கு அதிகமாக இருப்பதால் மீதமுள்ள அனைத்து மக்களையும் உடனடியாக வெளியேற அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுவரை சுமார் 17 சதுர கிலோமீட்டர் வரை தீ பரவியுள்ளது.
அணுசக்தி கோட்பாட்டை மாற்றுவோம்: ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல் இனப்படுகொலையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஈரான் தனது அணுசக்தி கோட்பாட்டை மாற்றும் என்ற கருத்து மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டத்தை அதிகரித்துள்ளது. ஈரான் அரசின் தலைவர் அயதுல்லா அலி கோமேனியின் ஆலோசகரான அதிகாரி ஒருவர், இஸ்ரேல் தொடர்ந்து அச்சுறுத்தலை தீவிரப்படுத்தினால் ஈரான் தனது அணுசக்தி கோட்பாட்டை மாற்றும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் மீது ராணுவம் தாக்குதல்
பாகிஸ்தான் அரசின் அதிக வரி , மின் கட்டண உயர்வு மற்றும் கோதுமை கொள்முதலை குறைக்க எடுத்த முடிவை திரும்பப் பெறவும் மக்கள் போரா ட்டம் நடத்தி வருகின்றனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் நடத்திய அமைதியான போ ராட்டத்தில் கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தடியடி நடத்தியும் பாதுகாப்பு படையினர் கல வரத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் மக்க ளுக்கும் பாதுகாப்பு படைக்கும் மோதல் உருவாகியுள்ளது.
இந்தியா - ரஷ்யாவிடம் எண்ணெய் பேரம்; அமெரிக்கா புதுத் தகவல்
ரஷ்யாவின் எண்ணெயை யாராவது வாங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதால் இந்தியா ரஷ்யாவிடம் எண் ணெய்யை வாங்க ஒப்புக்கொண்டது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார் செட்டி தெரிவித்துள்ளார். உலகளவில் எண்ணெய் விலைகள் உயராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ரஷ்யாவிடம் கொள் முதலை அனுமதித்ததாகவும் என்று அவர் கூறி னார். சர்வதேச விவகாரங்களில் பன்முகத்தன் மை பற்றிய மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.