tamilnadu

img

பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி 600 மதிப்பெண் பெற்று சாதனை!

பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி, 600-க்கு 600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 94.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி, 600-க்கு 600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ், ஆங்கில, பொருளாதாரம், வணிகம், கணக்குப்பதிவியல், கணினி பயன்பாடு என அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி நந்தினி திண்டுக்கல் நகரில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.