tamilnadu

திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் முக்கிய செய்திகள்

கொரோனாவுக்கு இருவர் பலி
திண்டுக்கல், ஜூலை 11- திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வுக்கு சனிக்கிழமை மேலும் இரண்டு பேர் பலியாயினர். நிலக்கோட்டை தாலுகா சொக்குபிள்ளைபட்டி அணைப்பட்டி பகு தியைச் சேர்ந்த 58 வயது நபர், நத்தம் அண்ணா நகர் வேலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் இருவரும் திண் டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டத் தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித் துள்ளது.

பக்தர்களின்றி தேரோட்டம்?
திருவில்லிபுத்துார், ஜூலை 11- திருவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழாவில் தங்கத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னாரை எழுந்த ருளச் செய்து பக்தர்களின்றி தேரோட்டம் நடத்த கோவில் நிர்வாகம் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இந்தக் கோவில் விழா ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 24-ஆம் தேதி தேரோட்டம் நடத்த வேண்டும். ஊர டங்கால் விழா நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இதனிடையே கோவில் நிர்வா கத்தின் சார்பில் ஆடிப்பூரத் திருவிழாவை பக்தர்களின்றி கோவிலுக்குள் நடத்த வும், ரதவீதிகளில் இழுக்கபடும் திருத் தேருக்கு பதில் கோவில் உட்பிரகாரத்தில் தங்கத் தேர் இழுக்கவும், இதை இணைய தளம் மூலம் ஒளிபரப்பி பக்தர்கள் தரி சனம் செய்ய அனுமதிக்கக்கோரி அர சிற்கு கடிதம் அனுப்பபட்டு உள்ளது.

60,000 பாக்கெட் கபசுர பவுடர் விநியோகம்
சிவகங்கை, ஜூலை 11- காரைக்குடியில் 60 ஆயிரம் கபசுர பவு டர் பாக்கெட்கள் வினியோகம் செய்துள்ள தாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார். அவர் கூறியதாவது,முதற்கட்டமாக காரைக்குடி நகராட்சிப் பகுதியில் வீடு கள் தோறும் 60 ஆயிரம் கபசுர பவுடர் பாக் கெட்கள் விநியோகம் செய்யப்பட்டுள் ளது. தொடர்ந்து சிவகங்கை, தேவ கோட்டை நகராட்சிகளில் வழங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சியில் முதற் கட்டமாக 60 ஆயி ரம் கபசுர பவுடர் பாக்கெட்டுகள் விநியோ கம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மாக சிவகங்கை, தேவகோட்டை நகராட்சி யில் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு வழங்கப் படுமென்றார்.

20 பேருக்கு கொரோனா
திருவில்லிபுத்தூர், ஜூலை 12- விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த 20 பேர் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருபது பேரில் திருவில்லிபுத்தூர் நகரில் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் இரண்டு பெண்களுக்கும், நகர் பகுதி யைச் சேர்ந்த பதினோரு பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது மம்சாபுரம் பகுதியில் மூன்று பேர், நாச்சியார்பட்டி பகுதியில் ஒரு வர், பொட்டல்பட்டியில் ஒருவர், வைத்தி யலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர், பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலுள்ள ஒருவர் என மொத்தம் ஒன்பது பேருக்கும் தொற்று பரவி யுள்ளது.

வட்டிகேட்டு மிரட்டலா? புகார் செய்ய எஸ்.பி., அறிவுறுத்தல்
சிவகங்கை, ஜூலை 11- மகளிர் குழுக்களிடம் வழங்கிய கட னுக்கான வட்டியை கட்டக்கோரி அவர் களை தொந்தரவு செய்யும் நிதி நிறு வனங்கள் மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்கப்படுமென சிவகங்கை காவல்கண்காணிப்பாளர் (பொறுப்பு) வருண்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்ததப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு வட்டி வசூலிக்க கூடாது என அரசு தெரிவித் துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஊர டங்கிற்கு முன் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கிய வங்கி, நிதி நிறுவனங்கள் வட்டி வசூல் செய்வதில் கட்டாயம் காட்டுவதாக வும் பெண்களின் வீடுகளுக்கு சென்று வட்டி கேட்டு மிரட்டுவதாகவும் புகார் வரு கிறது. அரசின் உத்தரவை மீறி, மகளிர் குழுக்களிடம் வட்டி கேட்டு மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற நிறு வனங்கள் குறித்து காவல் கண்காணிப்பா ளரின் அலைபேசி எண் 94899 19722-க்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.