திண்டுக்கல், மே 6- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் விவ சாயிகள் விளைவித்த 3500 வாழை மரங் களை வெட்டி சாய்த்த வனத்துறை அதிகாரி களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பெரியூர் கிராமம் பளியர் பழங்குடி மக்கள் பரம்பரையாக பயிர் செய்து வரும் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 3500 வாழை மரங்களை தேவதானப்பட்டி வனச்சரகத்தை சேர்ந்த வனத்துறையினர் வெட்டி அழித்துள்ளனர்.
குலை தள்ளும் பருவத்தில் இருந்த வாழையை அழித்து பெரும் இழப்பை மலைவாழ் மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளனர். சட்ட விரோதமான இந்த செயலில் ஈடுபட்ட வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப் பதுடன் வாழைக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறோம். வனவுரிமைச் சட்டம் 2006ன்படி பாதிக்கப்பட்டமக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் அதுவரை வனத்துறையினர் இத்தகைய செயலில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தவும் தாங்கள் தலையிட வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.