tamilnadu

img

பழனி கோவிலுக்கே செல்லாமல் பஞ்சாமிர்தம் பெற எளிய முறை...

பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு வரஇயலாதபக்தர்கள் தபால் மூலம் பிரசாதம் பெறும் வழிமுறை குறித்து கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவில் செயல் அலுவலர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:

பக்தர்கள் தபால் நிலையத்தில், ‘இ -பேமெண்ட்’ முறையில் ரூ.250 செலுத்தி பதிவு செய்யலாம். பில்லிங் பெயர் Error! Hyperlink reference not valid.அல்லது பில்லிங் ஐ.டி., 70063 என்பதைப் பயன்படுத்த வேண்டும்.’ஆன்லைன்’ மூலம் பதிவு செய்ய https://tnhrce.gov.in இணையதளத்தில் சேவைகள் பிரிவைத் தேர்ந்தெடுத்து வரிசை எண் 7-இல் பிரசாதம் புக்கிங் என்பதைத் தேர்வு செய்து பதியலாம்.  இந்தப் பிரசாதத் தொகுப்பில் 500 கிராம் பஞ்சாமிர்த டின், 10 கிராம் விபூதி, 6-க்கு 4- இன்ச் அளவில் பழனியாண்டவரின் ராஜஅலங்காரப் படம் உள்ளது. இதைத் தபால் துறையினர் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்குவர் எனத் தெரிவித்தார்.

;