சின்னாளபட்டி, பிப்.5- காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை.யின் இயற்பியல் துறை சார்பில், மேம்பட்ட பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் தொடா்பான தேசிய அளவிலான கருத்தரங் கம் இரண்டு நாட்கள் நடைபெற் றது. கருத்தரங்கை தொடக்கி வைத்து காந்தி கிராம பல்கலை. துணை வேந்தர் (பொ) எம்.சுந்தரவடிவேலு பேசிய தாவது: சமூக மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மேம்பட்ட பொருள்கள் குறித்த ஆய்வுகள் அமைய வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் ஆராய்ச்சி,மாற்றுத்திறனாளி களுக்கான எடை குறைந்த செயற்கை கை மற்றும் கால்கள் தயாரிப்புக்கு பேருதவியாக அமைந்தன. இதுபோன்ற ஆய்வுகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக பேராசிரியா் சி.கே.ஜெயசங்கா் பேசிய தாவது: அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,அறிவியல்மற்றும் தொழில் ஆய்வு மன்றம், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி அமைப்பு மற்றும் அணு அறிவியல் ஆராய்ச்சி வாரியம் ஆகிய நிறுவனங்களின் மூலமாக தோ்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு நிதிஉதவி அளித்து வருகிறது என்றார். மேலும், லேசர் உபகரணங்களில் லாந்தனைடுகளின் பங்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை விவரித்தார். மேம்பட்ட பொருட்களினால் மனித குலம் அடைந்த முன் னேற்றத்தை தேசிய பட்டறை ஒருங்கிணைப்பாளரும் உதவிப் பேராசிரியருமான கே.மாரிமுத்து விவரித்தார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற எட்டு பேராசிரியர்கள் அவர்களது துறை சார்ந்த மேம்பட்ட பொருட்களின் கண்டு பிடிப்பு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் மனித குலத்திற்கு எவ்வளவு இன்றியமையாததாய் உள்ளது என்றும் விளக்கினர்.