tamilnadu

img

குடிகாரர்களின் கூட்டத்தால் திணறிய மதுக்கடைகள்

சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள், மக்கள் எதிர்ப்பை மீறி மீண்டும் திறப்பு 

கொரோனா சமூகப் பரவலாகும் அபாயம்

புதுக்கோட்டை, மே 8- அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி  திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ‘குடி’மகன்கள் கட்டுக்கடங்காமல் குவிந்ததால் கொரோனா நோய்கிருமி சமூகத் தொற்றுக்கு இட்டுச் செல்லும் அபாயம் ஏற் பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் கொரோனா தொற்று அதிகமாகி சமூகப் பரவலுக்கு இட்டுச் செல்லும். ஏழை, எளிய குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர். எதையும் காதில் வாங்காத தமிழக அரசு வியாழக்கிழமையன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்தன.

அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கடையை மூட வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டை அணிந்து வியாழக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், வடகாடு, வேங்கிடக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பெண்கள் திரண்டு கடைகளை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னெழுச்சி யான போராட்டங்களில் ஈடுபட்டனர். எத்தகைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.  கொரோனா அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் நாற்பது நாட்களுக்கும் மேலாக குடியை மறந்து விட்டு குடும்பத்தினருடன் வசித்து வந்தவர்களு க்கு மீண்டும் போதை மயக்கம் தலைக்கேறியது. இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டும், பணம் இல்லாதவர்கள் கடன் வாங்கிக் கொண்டும் வியாழக்கிழமை காலை முதல் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். 

கடையிலிருந்து சில அடி தூரம் மட்டுமே தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனா லும் தடுப்புகளுக்கு அப்பால் பல மீட்டர் தூரத்திற்கு சரக்கு வாங்க குடிமகன்கள் குவியத் தொடங்கினர். அவர்கள் சமூக இடைவெளியை துளிகூட கடைபிடிக்கவில்லை. ஒருவருக்கு ஒருவர் நெரிசலாக நின்று கொண்டும் இடித்துக் கொண்டும் சரக்கு வாங்க காத்திருந்தனர். இதில், யாருக்கேனும் ஒருவருக்கு நோய்த் தொற்று இருந்தால் நிலைமை மிகவும் சிக்கலாகி விடும். சில நபர்கள் மட்டுமே கூடும் தேனீர் கடை களை மூடச் சொல்லும் அரசு பல நூறு பேர் ஒரே நேரத்தில் கூடும் டாஸ்மாக் கடைகளை திறக்கச் சொல்வது நியாயமா? மக்கள் செத்து மடிந்தால் கவலை இல்லை. லாபம் மட்டுமே ஆட்சியாளர்க ளின் குறிக்கோளா? வழக்கம் போல மீண்டும் மக்கள் மேலேயே பழியைப் போட்டு நீங்கள் தப்பிக்க முடியாது. மக்களின் ஆவேசத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.