tamilnadu

img

விலையில்லா ஆடு வழங்கக்கோரி வாலிபர் சங்கம் மனு

தருமபுரி, அக். 2- வேடகட்டமடுவு ஊராட்சி மக்களுக்கு அரசின் விலை யில்லா ஆடு வழங்கக்கோரி வாலிபர் சங்கத்தின் தலைமை யில் ஆண்டியீர் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக் கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சியில் 18 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அருந்ததியர் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இவ்வூராட்சியில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்ப டுத்தி தர வேண்டும்.

தமிழக அரசின் விலையில்லா ஆடு உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் இவ்வூராட்சி மக்க ளுக்கு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தனியார் கோழிபண் ணையை அகற்றிடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண் டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

வாலிபர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வேலா யுதம் தலைமையில் நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, விவசாயிகள் சங்க வட்டச் செயலா ளர் எஸ்.கே.கோவிந்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளர் பி.வி.மாது, மாற்றுத்திறனாளிகள் சங்க வட்ட செயலாளர் டி.வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.