தருமபுரி, மார்ச் 2- தருமபுரி ரோட்டரி மிட்டவுன் சார்பில் மகளிர் தினவிழா சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இவ்விழாவில் மாற்றம் கண்ட மகளிர் என்ற விரு துகள், குழந்தைகள் வளர்ச்சிதிட்ட மாவட்ட அலுவ லர் நாகலட்சுமி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் ஹேமலதா,அரசு வழக்க றிஞர் உமாமகேஸ்வரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸா மேரி, மருத்துவர் தங்கம் செந்தில்,அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தெர சாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விருது களை ரோட்டரி துணை ஆளுநர் சித்ரா வழங்கி னார். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி மிட்டவுன் தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் பிரபு குமார், பொருளாளர் செளந்திரபாண்டியன், முன்னாள் துணை ஆளுநர் கிருஷ்ணன், லட்சு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.