அரூர், பிப். 19- அரூர் வட்டம், எலவடை அருகேயுள்ள பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாது மகன் அசோக்குமார் (23). இதே ஊரைச் சேர்ந்த சக்தி வேல் மகன் சிங்காரவேலன் (23). நண்பர்களான இவர் கள் இருவரும் இருசக்கர வாகனத்தில், மொரப்பூரில் இருந்து அரூர் நோக்கி சென் றனர். அப்போது, நேதாஜி நகர் பகுதியிலுள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் அரூரில் இருந்து மொரப் பூர் நோக்கி வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இளை ஞர்களை அரூர் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். ஆனால், இளைஞர்கள் இருவரும் வரும் வழியில் உயிரிழந்ததாக அரசு மருத் துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அரூர் போலீ ஸார் வழக்குப் பதிந்து விசா ரித்து வருகின்றனர்.