tamilnadu

வெளிநாடு சென்று திரும்பியவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்

தருமபுரி, மார்ச் 23- கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்பு ணர்வு பணிகள் தருமபுரி மாவட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும்  மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்கவேண்டும். தருமபுரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், கடந்த 15 தினங்களில் தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தால் அது குறித்த  தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிப்பவர்களை இலவசமாக வீட்டிலேயே மருத்துவ பரிசோதனைக்கு உட்ப டுத்தி பாதுகாப்பாக கண்காணிப்பதற்கும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், உதவியாக இருக்கும். மேலும் மற்றவர்களுக்கு இந்நோய் பரவாமல் தடுக்கும் அரசின் முயற்சிக ளுக்கு முழு ஆதரவு தருமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.