tamilnadu

img

அனைத்துக் கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, நவ. 1- அனைத்துக் கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் ஊத்தங்கரை வட்ட மாநாடு அனுமந்தீர்த்தம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில், கே.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எம்.முத்து, மாவட் டச் செயலாளர் வி.கோவிந்தாசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆர்.சபா பதி, சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.கே. நஞ்சுண்டன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் எம்.அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இம்மாநாட்டில், வேலையின்றி தவித்து வரும் விவசாய தொழிலாளர்க ளுக்கு கொரோனா நிவாரணமாக ஒரு குடும்பதுக்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் ஆண்டுக்கு வேலை நாள் 200 ஆகவும், நாளொன்றுக்கு ரூ.600 கூலியும் வழங்க வேண்டும். இத்திட் டத்தை பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும். சாலை பராமரிப்பு பணிக ளில் ஒகேனக்கல் குடிநீர் திட்ட குழாய் கள் சேதமடைந்த பல கிராமங்க ளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை எனவே, அனைத்துக் கிராமங்களுக் கும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, புதிய வட்ட தலைவ ராக தருமன், செயலாளரராக பி.வரத ராஜன், பொருளாளராக கே.செல்வ ராஜ் உள்ளிட்ட 19 பேர் கொண்ட வட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.