தருமபுரி, அக்.17- தமிழகம் முழுவதும் ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்கு வரத்தை துவங்கிட வேண்டு மென திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் வலியுறுத்தியுள் ளார். இதுதொடர்பாக, தரு மபுரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப் பில் அவர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் செயல்பாடுகள் தமி ழக அரசுக்கு எதிராக உள்ளது. இந்த பல் கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க பல கட்ட முயற்சிகள் நடந்து வருவது மாநிலத் தின் வளர்ச்சிக்கு மிகவும் பாதிப்பாகும். அப் படி பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கையில் சென்று விட்டால் மாநில அரசின் உரிமை கள் அனைத்தும் பறிபோகும். எனவே, இத்த கைய சூழல் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை 100 சதவிகிதம் இயக்கிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் காவிரி மிகை நீரை நிரப்பும் திட் டத்தை செயல்படுத்த வேண்டும். ஒகே னக்கல் சுற்றுலா தளத்தில் தடை நீக்கி சுற்று லாப் பயணிகளை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு இன்றி தவித்து வரும் பரி சல், மசாஜ், சமையல் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.