தருமபுரி, நவ.6- நல்லம்பள்ளி அருகே லாரியில் கடத்திய 20 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த தொப்பூரில் சேலம் -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் சோதனைச் சாவடி பகுதியில் நல்லம் பள்ளி வட்டாட்சியர் சரவணன் தலைமையில் வரு வாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். இதில், சேலத்தில் இருந்து தருமபுரி சென்ற ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியின் ஓட்டுநர் உள்பட இருவர் வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென தப்பி ஓடினர்.
இதையடுத்து லாரியை சோதனை செய்ததில், சுமார் 20 டன் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அரிசியை பறிமுதல் செய்த அதி காரிகள், தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்ற னர். இச்சம்பவம் குறித்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த ஒட்டுநர் உள்ளிட் டோரை தேடி வருகின்றனர். மேலும், இந்த லாரியில் கடத்தி வரப்பட்ட அரிசி எங்கிருந்து, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.