tamilnadu

தருமபுரியில் ரூ.1.24 கோடி பறிமுதல்

தருமபுரி, ஏப்.9- தருமபுரி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.24 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அழகுசுந்தரம் தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டதில், வேனில் வந்தவர்கள் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1 கோடியே 24 லட்சத்து 22 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தருமபுரி வட்டாட்சியர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். மேலும், வேனில் வந்தவர்கள் தொப்பூர் குறிஞ்சி நகர் சுங்கச் சாவடியிருந்து இந்த பணத்தை வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றதாகவும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

;