tamilnadu

img

ஊராட்சி செயலரை நியமிக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா

தருமபுரி, அக். 15- ஊராட்சி செயலரை நியமிக்கக்கோரி முக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முக்குளம் ஊராட்சி செய லாளராக சரவணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதிகளில் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததால், அவரை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், ஊராட்சி செயலாளர் இல்லாததால், பொதுமக்க ளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. எனவே, புதிய ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண் டும் எனக்கோரி முக்குளம் ஊராட்சி மன்ற தலைவரான காஞ்சனா, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரை யில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காஞ்சனாவிடம்,  அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்  பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது பேசிய ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா, ஊராட்சி செயலாளர்  நியமிக்கப்படாததால் பொதுமக்களுக்கான பிரச்சனையை தீர்த்து வைக்க முடிய வில்லை. குடிநீர், தெருவிளக்கு பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டுள்ள தால் பொதுமக்களின் புகார்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. நேர்மையான ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து உடனடியாக கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித் ததன் அடிப்படையில், ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தை கைவிட்டார். இப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.