பென்னாகரம், மே 26 - பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலை அருகே சாலையின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள தடுப்பை நீக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பென்னாகரம் நகர் பகுதிக்குள் நுழையும் வாக னங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகே சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப் பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது படிப் படியாக ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் இதுவரையிலும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பை நீக்கவில்லை.
மாங்கரை, பருவதனஅள்ளி, அஞ்சேஅள்ளி மற்றும் பாப்பாரப்பட்டி ஊராட்சி பகுதியி லிருந்து வரும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பென்னாகரத்தில் வாங்க வேண்டிய நிலையே உள்ளது. இந்நிலையில், சாலையின் குறுக்கே தடுப்பு அமைக்கப்பட் டுள்ளதால் அவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி நகர் புறத்தை அடைய வேண்டிய நிலை உள்ளது. தற்போது தரும புரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் முற்றிலுமாக குணமடைந்து உள்ளனர். இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் பென்னாகரம் நகர் பகுதிக்கு விரைவாகச் சென்று வரும் வகையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு வேலியை நீக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் இந்திரா நகரில் வைக்கப்பட்டுள்ள தடுப்பையும் அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.