tamilnadu

img

சுதந்திரப் போராட்டத் தியாகி பஞ்சாட்சரத்தின் நினைவஞ்சலி கூட்டம்

 பென்னாகரம், ஜூலை 22- சுதந்திரப் போராட்டத் தியாகி பஞ்சாட்சரத்தின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் பாப் பாரப்பட்டியில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி பஞ்சாட்சரத்தின் நான்காம் ஆண்டு நினை வஞ்சலி கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பகுதி செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சிலம்பரசன், பகுதி செயலாளர் லோக நாதன், மாதர் சங்க பகுதி செயலாளர் ராஜாமணி, மனித உரிமைகள் கழகத்தின் துரைராஜ், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் ஆதி மூலம், முகிலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தியாகி பஞ்சாட் சரத்தின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.