tamilnadu

img

சிதலமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, ஜன. 29- குண்டும், குழியுமாக உள்ள பாரதிபுரம் 60 அடி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் 60 அடி சாலை யில் அரசின் அரிசி சேமிப்புக் கிடங்கு, அரசு போக்குவ ரத்து கழகம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலை வழியாக அரிசி சேமிப்பு கிடங்கிற்கு 100க்கும் மேற்பட்ட லாரிகள், அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலை யில், கடந்த ஒரு வருடமாக 60 அடி சாலை குண்டும், குழியு மாக காணப்படுகிறது. இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரி, நகராட்சி நிர்வாகத் திடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனா லும், ஒரு வருடமாக சாலையை சீரமைக்கவில்லை. எனவே, உடனடியாக சிதலமைடந்த சாலையை சீரமைக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

;