tamilnadu

img

வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.14- அரூர் வட்டாரப் பகுதி யில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  அரூர் வட்டம் கீழானூர், மேல்செங்கப்பாடி, கோமாளிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு  புறம்போக்கு நிலத்தை வீடு  இல்லாத அனைவருக்கும் வீட்டு மனைகளாக பிரித்து வழங்க வேண்டும். செல்லம் பட்டி ஊராட்சியில் உள்ள  அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஜடையம்பட்டி மற்றும் அரூர்  அம்பேத்கர் நகரில் அரசு சார்பில் வழங் கப்பட்டுள்ள வீட்டுமனைப் பட்டாக்களை  அளவீடு செய்து பயனாளிகளுக்கு அத்து  காட்ட வேண்டும்.மொரப்பூர் அண்ணல்  நகர், கோட்டப்பட்டி அண்ணாநகர், கே. ஈச்சம்பாடி ஆகிய கிராமங்களில் வீடுகள் அமைத்து குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். மேல்செங்கப்பாடியில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வெள்ளி யன்று அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தருமபுரி மாவட்டச் செயலாளர் எம்.முத்து தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா.சிசுபாலன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சோ.அருச்சுணன், மாவட்ட பொரு ளாளர் இ.கே.முருகன், ஒன்றிய செய லாளர்கள் ஆர்.மல்லிகா, தங்கராஜ், ஆறுமுகம், எஸ்.கே.கோவிந்தன், வாலிபர் சங்க சி.வேலாயுதம், ஒன்றியக்குழு உறுப் பினர் கே.சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.