தருமபுரி, அக்.24- மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி பகுதியில் வசிக்கும் ஆதிதிரா விடர் மக்களுக்கு இலவச மனைப் பட்டா கேட்டு அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நல்லம்பள்ளி வட்டாட் சியர் அலுவலகத்தில் வியாழ னன்று மனு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி வட்டத்திற்குட்பட்ட மிட்டா ரெட்டி அள்ளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தலித் குடும் பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் நிலமற்ற ஏழைகள் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக சேர்ந்து வசித்து வருகின்றனர். எனவே, இம்மக்களுக்கு வசிக்கும் கிரா மத்தின் அருகே உள்ள அரசு புறம் போக்கு இடத்தில் இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 92 மனுக்கள் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் கே. எல்லப்பன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் கே.குப்புசாமி மற்றும் அந்தோணி, ரமேஷ் ஆகியோர் பங் கேற்றனர்.