tamilnadu

img

குடிநீர் கேட்டு பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பென்னாகரம், ஜூன் 29- ஒரு வருடமாக குடிநீர் வழங் காததைக் கண்டித்து, உடனடி யாக குடிநீர் வழங்க வேண்டும்  என வலியுறுத்தி பாப்பாரப் பட்டி பேரூராட்சி அலுவல கத்தை பொதுமக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தர்மபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், பாப்பாரபட்டி பேரூ ராட்சி 14வது வார்டு உட்பட்ட வள்ளூர் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட் டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக குழாயில் ஏற்பட்ட பழுது காரண மாக அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலை விற்கு அப்பால் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது அப் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதி காரிகளிடம் முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலு வலகத்தைக் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத் தியதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைந்து தண்ணீர் வழங் கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து முற்று கைப் போராட்டம் கைவிடப்பட் டது. இப்போராட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க பாப் பாரப்பட்டி பகுதி செயலாளர் ஆர்.சக்திவேல், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க பகுதி செய லாளர் லோகு, விவசாயிகள் சங்க பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.