tamilnadu

img

அரசின் உத்தரவை மீறும் நுண் நிதி நிறுவனங்கள்: மாதர் சங்கம் புகார் மீது டிஎஸ்பி நேரடி விசாரணை

தருமபுரி, அக்.9- தருமபுரியில் அரசுகளின் உத் தரவை மீறி செயல்படும் தனியார் நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத் தினர் அளித்த புகாரின்பேரில் நிதி நிறுவன ஊழியர்களிடம் டிஎஸ்பி நேரடி விசாரணை நடத்தினார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து தொழில்க ளும் முடங்கியுள்ள சூழலில், மகளிர் சுய உதவிக்குவினர் பெற்ற கடனுக் கான தவணையை தற்போதைக்கு வசூலிக்கக் கூடாது என தனியார் நுண்நிதி நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள் ளன. ஆனால், இந்த உத்தரவை மீறி தருமபுரி மாவட்டத்தில் தனியார் நுண் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தவணையை கட்டச் சொல்லி பெண் களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக தருமபுரி கோட் டாட்சியர் பொறுப்பு தனிகாச்சலம் அரசு உத்தரவை மீறி தனியார் நுண் நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூல் செய்யக்கூடாது. இதை மீறி னால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பிற்கு பின்னரும் தனியார்  நுண் நிதி நிறு வனங்கள் கெடுபிடி வசூலில் ஈடு பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளிடம் மாதர் சங்கத்தினர் மீண்டும் புகார் அளித்தனர். இப்புகா ரின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட துணை காவல் கண்கா ணிப்பாளர் கண்ணன் தலைமை யில் பாதிக்கப்பட்ட பெண்களிட மும், நுண் நிநி நிறுவன ஊழியர்களி டமும் நேரடி விசாரணை செய்தனர்.

இவ்விசாரணையின் முடிவில், தனி யார் நுண் நிதி நிறுவன ஊழியர் கள் வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ர வரி மாதம் வரை கடனை கட்டச் சொல்லி நிர்பந்திக்க கூடாது. இதை மீறினால் சட்டரீதியான நடவ டிக்கை எடுக்கப்படும் என எழுதி வாங்கப்பட்டது. முன்னதாக, இந்த விசாரணை யில் மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.கிரைஸாமேரி, நகரச் செய லாளர் நிர்மலாராணி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் மாலா, லதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் வி.பி.சாமி நாதன், தருமபுரி நகர்புற பெண்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் செய லாளர் ஆயிஷா ஜாஸ்மின், சாலிமா பேகம்  உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.