தருமபுரி, அக்.18- சமூக விரோதிகளின் கூடாரமாக மரண்ட அள்ளி பேருந்து நிலையம் மாறி யுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர். தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி பேருந்து நிலையத்திலிருந்து அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், கனகபுரா, தருமபுரி, திருவண்ணாமலை, பழனி, சென்னை உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கிறது. இச்சூழலில், பகல் மற்றும் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பேருந்து நிலை யத்தில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு மது பானம் அருந்தி வருகின்றனர்.
இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல் லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி யினர் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிர் வாகத்திற்கும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பேருந்து நிலையம் பகுதியில் கண் காணிப்பு கேமரா பொருத்தி இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வே ண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.