தருமபுரி, ஜூன் 22- பென்னாகரத்தில் சிட்கோ தொழிற் பேட்டைக்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பென்னாகரம் வட்டக் கிளை 12 வது வட்ட மாநாடு பென்னாகரம் பேரூராட்சி கூட்ட ரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு வட்ட தலைவர் எம்.திம்மராயன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பாபு வரவேற் றார். மாநாட்டை துவக்கி மாவட்ட செயலா ளர் ஏ.சேகர் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.யோகராசு வாழ்த்தி பேசினார். வட்ட செயலாளர் எம்.பெருமாள், வட்ட பொருளாளர் கே.வேலவன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். முன்னதாக, இம்மாநாட்டில் அனைத் துப் பகுதிக்கும் குடிநீர் பஞ்சத்தை போக் கும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் பென்னாகரம் பகுதியில் தொழிற் பேட்டை உருவாக்க வேண்டும். பெண்க ளுக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் மீதான அரசின் பழி வாங்கும் பணி இடைநீகத்தை ரத்து செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56 ஐ ரத்து செய்ய வேண்டும். ஜாக் டோ-ஜியோவின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, புதிய தலைவராக எம்.திம்மராயன். செயலாளராக எம்.பெரு மாள், பொருளாளராக, எம்.பாலசந்திரன், துணைத் தலைவர்களாக எம்.தனபால், சி.முருகன்,ராஜா, இணைச் செயலாளர்க ளாக எம்.சங்கர், எல்.எஸ்.ஜார்ஜ், கே. வேலவன், மாவட்ட செயற்குழு உறுப்பின ராக கே.ரமணி, வட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளராக எம்.ஜெயலட்சுமி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் எம்.சிவப்பிரகாசம் நிறைவுறையாற்றினார். கே.ரமணி நன்றி கூறினார்.