tamilnadu

நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி தர்ணா

தருமபுரி, ஆக. 27- அரூரை அடுத்த பறையப்பட்டி புதூர் கிராம ஊராட் சியில் நூறுநாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதிப் பெண்கள் வியாழனன்று அருர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது பறையப்பட்டி புதூர். இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஏரிகள், குளம், நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்க ளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. நூறுநாள் வேலைதிட்டத்தில் நாள்தோறும் 10 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர்.  இவ்வாறு, குறைந்த எண்ணிக்கையிலான தொழிலா ளர்களுக்கு வேலை வழங்குவதால் ஏழை, எளிய குடும்பத் தினர் பாதிக்கின்றனர். எனவே, கூடுதல் எண்ணிக்கையி லான தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பெண் தொழிலாளர்கள் தர்ணாப் போராட்டத்தைக் கைவிட் டனர்.

ஊராட்சி செயலர் இடமாற்றம்
இதற்கிடையே, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங் காத காரணத்தால், பறையப்பட்டி புதூர் ஊராட்சி செயலர் வனிதா, கோபாலபுரம் கிராம ஊராட்சி செயலராக இட மாற்றம் செய்யப்பட்டார்.