தருமபுரி, அக்.2- தருமபுரி அருகே நடந்த நில மோசடி விவகாரத்தில் போலி நீதிபதி மற்றும் அவருடைய பாது காவலரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் ஜெகநாதன். தொழில் அதிபர். இவருக்கு சொந்தமான நிலம் தருமபுரி அருகே அதிய மான்கோட்டை பகுதியில் உள்ளது. இதில் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தை போலி ஆவணம் தயா ரித்து சிலர் வேறொரு நபருக்கு விற் பனை செய்ததாக புகார் எழுந் தது. இதுதொடர்பாக ஜெகநாதன் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். பின்னர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசா ரணை நடத்தி நாகராஜ் என்ப வரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் போலி ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்த தாகவும், மேலும் போலியான சமரச தீர்ப்பாயத்தை ஏற்படுத்தி மோச டியில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் தருமபுரி மற்றும் கோவையை சேர்ந்த 2 வழக்கறி ஞர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்தனர். மேலும் விசா ரணையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்திரன் (54) என்பவர் போலி நீதிபதியாக செயல்பட்டு போலி யாக சமரச தீர்ப்பாயத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிகிறது. அவருக்கு திருவண்ணா மலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த குமார்(49) என் பவர் பாதுகாவலர் போல் செயல் பட்டு மோசடிக்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத் தரவுப்படி தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர மாக தேடி வந்தனர். இந்த நிலை யில் சந்திரன், குமார் ஆகியோர் கரூர் மாவட்டத்தில் உள்ள சுங் கச்சாவடியை காரில் கடந்த போது அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த குற்றப் பிரிவு காவலர்கள் பிடித்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலி நீதிபதி சந்திரன், அவருக்கு பாது காவலராக செயல்பட்ட குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத் தனர். சமரச தீர்ப்பாயம் நடத் திய போலி நீதிபதி கைது செய்யப் பட்ட சம்பவம் தருமபுரியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.