tamilnadu

எட்டு வழி சாலை திட்டத்தினை கைவிடுக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்

தருமபுரி, மார்ச் 21-  சேலம் எட்டு வழி சாலை திட்டத்தினை கைவிடக்கோரி மக்களவையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என். வி.எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தினார்.  இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, சேலம் முதல் சென்னை வரை ஏற்கனவே அமைந்துள்ள வேலூர் மற்றும் திண்டிவனம் வழியாக நல்ல தரமான நான்கு வழிச்சாலையாக உள்ளது. தற்போது புதிதாக எட்டு வழி  சாலையாக அமைக்க அரசு முயன்று வருகிறது. இந்த புதிய எட்டு வழி சாலை திட்டம் அமைவதால் அப்பகுதியை சேர்ந்த  விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.  எனவே, 8 வழி சாலை திட்டத்தை கைவிட்டு, ஏற்க னவே உள்ள நான்கு வழி சாலையை எட்டு வழி சாலையை மாற்றினால் போதுமானதாகும். மேலும், புதிய 8 வழி  சாலை திட்டத்தை நிறுத்தி பழைய நான்கு வழிச்சாலையை எட்டு வழி சாலையாக அமைக்கும் பட்சத்தில் அந்த பகுதி யில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பேணி காக்கப் படும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசி னார்.