தருமபுரி, நவ.3- தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி நடந்தது. இதில், கொசு புழு உற்பத்திக்கு காரணமான கடையின் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு அருகே உள்ள மாரண்ட அள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஓசூரை சேர்ந்த இளநிலை பூச்சி யியல் வல்லுநர் கோவிந்தன் தலைமை யில், மாரண்டஅள்ளி 15 வார்டுகளிலும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவ னங்கள், வீடுகளில் டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கடை களில் தண்ணீர் தேங்கி நிற்பதும், சுகா தாரமற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கொசு புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில், சுகாதார மேற்பார்வை யாளர் சுந்தர், பேரூராட்சி செயல் அலு வலர் ராஜா ஆறுமுகம், இளநிலை உதவி யாளர் சம்பத் மற்றும் துப்புரவு மேற் பார்வையாளர், டெங்கு ஒழிப்பு பணியாளர் கள் கலந்து கொண்டனர்.