tamilnadu

img

தருமபுரியில் வாக்குச்சாவடி குறித்த ஆலோசனை கூட்டம்

தருமபுரி, மே 28-தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள், பென்னாகரம் பேரூராட்சியில் 18 வார்டுகள், பாப்பாரப்பட்டியில் 15 வார்டுகள், காரிமங்கலத்தில் 15வார்டுகள், மாரண்டஅள்ளியில் 15 வார்டுகள், அரூரில்18 வார்டுகள், கடத்தூரில் 15 வார்டுகள், கம்பைநல்லூரில்15 வார்டுகள், பி.மல்லாபுரத்தில் 15 வார்டுகள் பாப்பிரெட்டிப்பட்டியில் 15 வார்டுகள் என மொத்தம் உள்ள 159 வார்டுகளில் உள்ள 175 வாக்குச்சாவடிகளிலும், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,342 வார்டுகள், 1,671 வாக்குச்சாவடிகளுக்கும் வரைவு பட்டியல் சரிபார்க்கப்பட்டது. இதுகுறித்து கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், எழுத்துப் பூர்வமாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜிஜாபாய்உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

;