tamilnadu

img

‘வன்முறையற்ற, போதையற்ற தமிழகம்’ நடைப்பயணத்தில் பங்கேற்ற மாதர் சங்கத்தினருக்கு பாராட்டு

தருமபுரி, டிச.14- வன்முறையற்ற, போதையற்ற தமிழ கத்தை  வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் நடத்திய நடைப் பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு விழா சனியன்று தருமபுரியில் நடை பெற்றது.  பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, போதைப்பழக்கத்திற்கு எதிராக டிச.25ஆம் தேதியன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 400 கி.மீ தூர நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்ட தருமபுரி மாவட்ட மாதர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.தங்கவேல், மாவட்டச் செயலாளர்  ஏ.குமார் ஆகியோர் நடைபயணத்தில்  கலந்துகொண்ட மாதர் சங்க  நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து எம்.முத்து,   மாதர்சங்க மாவட்டத்தலைவர் ஏ.ஜெயா,  பொருளாளர் பி.ராஜாமணி, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, நிர்வாகிகள்  பி.கிருஷ்ணவேணி, எம்.மீனாட்சி,ரங்க நாயகி, தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.