tamilnadu

img

ஆர்ப்பரித்த காவேரி; ஆதங்கத்தில் விவசாயிகள்

தருமபுரி மாவட்டம், தமிழ கத்தின் மிகவும் பின் தங்கிய மாவட்ட மாகும். இந்த மாவட்டத்தில் உள்ள  மக்கள் பெரும் பகுதியினர் விவ சாயம் மற்றும் விவசாய கூலித் தொழிலை மட்டுமே நம்பி தங் களது வாழ்க்கையை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பருவ மழைகள் பொய்த்து வரும் காரணத்தால் விவ சாயம் செய்ய முடியாமல் பெங்க ளூரு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு  குடி பெயர்ந்து செல்லும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், பருவமழை பொய்த்தது காரணமாக இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீரும் வெகுவாக குறைந் துள்ளது. இதன் காரணமாக இந்த  மாவட்ட மக்கள் குடிநீருக்கே அல்லாட வேண்டிய சூழல் ஏற் பட்டுள்ளது. விவசாயத்தை தவிர்த்து பால் தொழிலை நம்பி கால்நடைகளை வளர்த்து வரும் இந்த மாவட்டத்து மக்கள் கால் நடைகளை கூட பராமரிக்க முடி யாத ஒரு அவல நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளனர். இந்நிலையில்தான், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் எல்லை யோர பகுதிகளில் அதிக கன மழை பெய்ததன் காரணமாக கர் நாடக மாநிலத்தில் உள்ள பல் வேறு அணைகள் நிரம்பி வழிந்தன.   அதனால் கபினி, கிருஷ்ணசாகர்  போன்ற  பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உபரி நீர் அப்படியே வெளியேற்றப் பட்டது.  அதன் விளைவாக, தருமபுரி  மாவட்டம், ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி யில் 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து  துவங்கி அடுத்த ஓரிரு நாட்களில் மூன்று லட்சம் கன அடியை எட்டி  நின்றது. இந்த நீர்வரத்தை காண் பதற்காக பல்வேறு மாவட்டங் களில் இருந்து சுற்றுலா பயணிகள்  வந்ததோடு மட்டுமல்லாமல், தருமபுரி மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் நீர்வரத்தை கண்டு மகிழ்ந்து சென்றனர்.  ஆனால் “ஆற்று நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்க முடியாது” என்பதற்கு ஏற்ப  ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் 3  லட்சம் கன அடி தண்ணீர் போய்க்  கொண்டிருந்த அதே வேளையில்  மாவட்டம் முழுவதும் பெரும் பாலான பகுதிகளில் குடிநீர்  தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட் டுள்ளது. அதோடு மட்டுமல்லாது,  தருமபுரி மாவட்டத்தில் மழை பொய்த்துப் போன காரணத்தால் விவசாயிகள் செய்வதறியாது  திகைத்து நிற்கின்றனர். ஒரு பக்கம் காட்டாற்று வெள்ளம், மறு பக்கம் வறட்சி. இதுவே இந்த  மாவட்ட மக்களின் நிலை. இதைப் போக்க இதுபோன்ற வெள்ளப் பெருக்கு காலத்தில் வரும் உபரி நீரை இந்த மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் நிரப்ப மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக, ஒகேனக்கல்லில் இருந்து வரும் நீரை கூத்தப் பாடி ஊராட்சி மட்டம் கிராமத்தில் உள்ள கெண்ணம் குட்டை ஏரில் நிரப்பி, அதன் வழியாக கூத்தப்பாடி ஏரி,  குள்ளாத்திரம்பட்டி, கோடியூர், ஆணைகள்ளனுர்,  மோட்டு பட்டி வழியாக மாவட்டத்திலுள்ள 600க்கும் மேற்பட்ட ஏரிகளில் இந்த நீரை நிரப்ப வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். இத னால் இந்த மாவட்டத்தில் விவ சாயம் செழிப்பதோடு, குடிநீர் தட்டுப்பாடும் நீங்கி, நிலத்தடி நீரும்  உயரும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த மாவட்டத்தைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இந்தத் திட்டம்  நிறைவேற்ற 356 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளதாக வாக்கு றுதியை அளித்தார். இதைத் தொடர்ந்து, அப்போது நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ், இந்த மாவட்டத்தில் மீண்டும் வெற்றி  பெற வேண்டும் என்ற ஆதங்கத் தோடு இந்த மாவட்டத்தில் உபரி நீரை நிரப்புவதற்காக கையெழுத்து பெறுகிறேன் என்கிற போர்வை யில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக் கமும் நடத்தினர்.  ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியும், அனைத்திந்திய அண்ணா  திராவிட முன்னேற்ற கழகமும் இணைந்த கூட்டணி நாடாளு மன்ற தேர்தலில் தோல்வியடைந் ததை தொடர்ந்து, தற்போது தரு மபுரி மாவட்ட மக்களின் கோரிக் கையை முற்றிலுமாக மறந்து விட்டனர்.  இச்சூழலில்தான், இந்த ஆண்டு 3 லட்சம் கன அடி தண்ணீர் ஒகேனக் கல்லில் சென்றும், இந்த மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற அவல நிலை தொடர்கிறது. ஆகவே, இனி வரும் காலங்களில் இது போல் வரும் உபரி நீரை சேமிக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு  செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட மக்களும், விவசாயிகளும் எதிர்ப் பார்த்து ஆதங்கத்தோடு காத்தி ருக்கின்றனர்.                                                     (ந.நி)