tamilnadu

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவர் மீது வழக்குப் பதிவு

தருமபுரி, செப்.5- கடத்தூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டவர் மீது தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறை யினர்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியைச் சேர்ந்த 11  வயது சிறுமி புதனன்று வீட்டின் பின்புறமுள்ள கழி வறைக்கு சென்றுள்ளார். அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்த குப்பன்(52) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.