tamilnadu

img

இலவச மனைபட்டா கேட்டு தலித் மக்கள் ஆட்சியரிடம் மனு

தருமபுரி, டிச. 2- இலவச வீட்டுமனைபட்டா கேட்டு குண்டல அள்ளி தலித் மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பைசுஅள்ளி ஊராட்சியில் குண் டல அள்ளி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலனோர் நிலமற்ற ஏழை கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களில் பலர் வீடு இல்லாமல் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வசித்து வரும் அவல நிலை உள்ளது.  இந்நிலையில், இம்மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனைப்பட்டா கேட்டு மனு அளித்தும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே வீடு இல்லாத 50க்கும் மேற்பட்ட குடுபங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி அப்பகுதியினர் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.