tamilnadu

img

ஆதிதிராவிடர் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு தீ.ஒ.முன்னணி மனு கொடுக்கும் போராட்டம்

தருமபுரி, நவ. 9- காரிமங்கலம் அம்பேத்கர் நகர் ஆதிதி ராவிடர் மக்களுக்கு அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காரி மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற் றது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அம்பேத்கர் நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த  குடும்பத்தினர், கூலி தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குடிசை  வீட்டில் வாழ்ந்து வரும் இம்மக்கள் ஒரே  வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். பல தலைமு றைகளாக வீடு இல்லாமல் வசித்து வரும் அப்பகுதி மக்கள் அரசு வீடு, வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1997 ஆம் ஆண்டு சுமார் 6.42 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு பயனா ளிகளுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கப் பட்டது. இந்த நிலத்தின் உரிமையாளர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் அடிப்படையில் கடந்த 2003  ஆம் ஆண்டு நில உரிமையாளருக்கே நிலம்  என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மக்க ளுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது. தற்போது அரசுக்கு சொந்த மான நிலம் 1.53 ஏக்கர் உள்ளது. இந்த  நிலத்தில் மேற்கண்ட பயனாளிகளுக்கு அரசு அடுக்குமாடி குடியிருப்பு  கட்டித்தர  வேண்டும் என வலியுறுத்தி காரிமங்க லம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டி.மா தையன் தலைமை வகித்தார். இதில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் பி.ஜெயராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பொருளாளர் கே.கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன், வெள்ளிங்கிரி, தேவன் பண்ணி யாண்டிகள் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அம்பேத்கர், திமுக நிர்வாகி குட்டி, வழக்கறிஞர்கள் சுரேஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் முடி வில் கோரிக்கை மனுவை வட்டாட்சியர் கலைசெல்வியிடம் சங்க தலைவர்கள் அளித்தனர்.