tamilnadu

img

செல்போன் செயலி மூலம் குறைகளை கேட்டு தீர்க்க நடவடிக்கை தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியர் தகவல்

தருமபுரி, அக். 30, செல்போன் செயலிமூலம் குறைகளை கேட்டு 15 நாட்களில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க நடவ டிக்கை எடுக்க உள்ளதாக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று புதிய மாவட்ட ஆட்சியராக  எஸ்.பி.கார்த்திகா பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகை யில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு விரைவாக கிடைத்திட நட வடிக்கை மேற்கொள்வேன். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப் பட்டி உள்ளிட்ட 11 பகுதிகளில் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய தகுதி யுள்ள பயனாளிகளுக்கு இந்த வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 மலைப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் குறை களை நேரில் வந்து தெரிவிப்பது கடினமாக உள்ளது. தற்போது கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொது மக்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே செல்போன் செயலி மூலம் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் மலைப்பகுதிகள் உள்ள மற்றும் தொலை தூரங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதுபோன்று பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா  தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான் அரூர், சார் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஆ.தணிகாசலம், துணை இயக்குநர் (கனிமம்) ஜெயபால், துணை இயக்கு நர் (சுகாதாரப் பணிகள்) மரு.பூ.இரா.ஜெமினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.