tamilnadu

வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி கட்சி சின்னம் வரைந்ததாக 12 வழக்குகள் பதிவு

தருமபுரி, ஏப்.1- தருமபுரியில் வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி கட்சி சின்னம் வரைந்ததாக காவல்துறையினர் 12 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நபர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக சுவர்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இப்படிசெய்யக்கூடிய விளம்பரங்கள் வீட்டின் உரிமையாளர் அனுமதியின்றி அவர்களின் வீட்டின் சுவர்களில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்தபுகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து உள்ளனர். இதில் தருமபுரி காவல் நிலையத்தில் 2 வழக்குப்பதிவு, மதிபோன் பாளையம் 1, கம்பைநல்லூர் 1, அதியமான் கோட்டை 1, கோட்டப்பட்டி 1, பாப்பாரப்பட்டி 1, ஏ. பள்ளிப்பட்டி 2, கடத்தூர் 2 மற்றும் பாலக்கோடு 1 என மொத்தம் தருமபுரி மாவட்டம் முழுவதும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

;