tamilnadu

img

தருமபுரி: பாலியல் தொல்லை கொடுத்து சிறுவன் கொலை

தருமபுரி அருகே 6 வயது சிறுவனை கட்டி போட்டு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் காட்டம்பட்டியை சேர்ந்த 6 வயது சிறுவன் கடந்த 16-ஆம் தேதி முதல் காணவில்லை என்று பெற்றோர் தரப்பில் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள காலியான குடிநீர் தேக்கத் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடப்பது  தெரியவந்தது. 
இது தொடர்பாக பிரகாஷ் என்ற 19 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த இளைஞரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.
அந்த இளைஞர் சிறுவனிடம் ஆசை வார்த்தைக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதும், வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூங்காவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.