திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஒரு மாத கால தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மொத்தம் 1821 சந்தாக்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.26 லட்சத்து 53 ஆயிரத்து 800 சந்தா தொகையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசனிடம் ஒப்படைத்தார்.