சென்னை,ஜூலை 27- மக்களவையில் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் குறைந்தபட்ச ஜனநாயக அணுகுமுறை கூட பாஜகவிடம் இல்லை என்றும் திருமாவளவன் எம்.பி., கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தகவல் அறியும் உரிமை சட்டம், தேசிய புலனாய்வு முகமை, முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்டம், மனித உரிமைகள் சட்டம் உள்ளிட்ட ஏராளமான மசோதாக்களை மக்களவை யில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையில் பெரும்பான்மை பலத்தை வைத்து பாஜக அரசு நிறை வேற்றுகிறது. நிலைக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் கேட்கவில்லை. குறைந்த பட்ச ஜனநாயக அணுகுமுறையும் பாஜக-விடம் இல்லை. எதிர்க் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நாடாளுமன்றம் பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது வேதனைக்குரியது” என்றார்.