tamilnadu

img

தமிழக சிறை அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்

சென்னை,பிப்.1- தமிழக சிறைகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் படி அனைத்து சிறைத் துறை துணை தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைத் துறை தலைவர் அலு வலகம் வெளியிட்ட அறிவிப்பில், சிறைகளில் நடைபெறும் பொது நிர்வாகம் குறித்து நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், பல சிறை களில் ஊழல்களின் ஆதிக்கம் வேரூன்றி காணப்படுவதும்,  சிறைவாசிகளுக்கு வசதிகள் செய்து தர பணம் கோருவ தும், பிரபல ரவுடிகள், தாதாக்க ளுக்கு துணை புரிவதும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது.  பணம் பெற்றுக் கொண்டு கைதிகளை செல்போன், போதை பொருள் பயன்படுத்த அனு மதிப்பது உள்ளிட்டவையும் தெரிய வந்துள்ளதாகவும், இது குறித்து விசாரித்து துறை ரிதீ யில் நடவடிக்கை எடுக்கவும் அறிவிப்பில் உத்தரவிடப்பட்டுள் ளது.  

;