கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை, செப். 27- அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் செயலில் தொண்டு நிறுவனங்களை அனுமதிப்பதாக அரசு அறிவித்துள் ளது. இது அரசுப் பள்ளிகளை ஆர்எஸ்எஸ் கையில் ஒப்படைக்கும் நடவடிக்கையே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கட்சியின் தென்சென்னை மாவட் டக்குழு சார்பில் வியாழனன்று (செப்.27) தி.நகரில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: அண்ணா பல்கலைக் கழக பொறி யியல் கல்லூரியில் பகவத்கீதையை கற்பிக்க தொடங்கியுள்ளனர். மகா பாரதம், ராமாயணம் படித்துவிட்டா இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயனை ஏவினார்களா? மதச்சார்பற்ற இந்தி யாவை இந்துத்துவா நாடாக மாற்று வதற்கு இத்தகைய வேலைகளை செய்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது மத்திய அரசே இறுதிப் படுத்தாத நிலையில், அதனை தமிழ கத்தில் வேகவேகமாக அமல்படுத்து கிறார்கள். அரசாணை வெளியிட்டு 8, 9ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். பாஜக செய்ய தயங்கு வதை கூட அதிமுக அரசு செயல்படுத்து கிறது.
இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு
பல்கலைக் கழகங்களில் சமஸ்கிரு தம், இந்தியை திணிக்க முயற்சிக்கி றார்கள். ஒரு மொழியை ஒருவர் கற்க விரும்பினால் தடையில்லை. அதி காரத்தோடு ஒரு மொழி வந்தால் அதை எதிர்த்து மாணவர்கள் போராடு வார்கள். இந்தி திணிப்பிற்கு எதிராக தென்மாநிலங்களில் உள்ள மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்களை ஒருங்கி ணைத்து சென்னையில் மாநாடு நடை பெறும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 1.45 லட்சம் கோடியை நிதியமைச்சர் தருகிறார். ஆனால் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு வைத்துள்ள சில ஆயிரம் கோடி பாக்கியை தரக்கோரி போராடுகிற நிலை உள்ளது. விவசாயிகள் தினந் தோறும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். சென்னை டாங்கி தொழிற்சாலை, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை போன்றவற்றை தனியாருக்கு கொடுக்க உள்ளார்கள், ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலை, சென்ட் ரல் ரயில்நிலையம் போன்றவற்றை ஏலம்போட உள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தவணை முறையில் அழிக்கிறார்கள். பொதுத்துறைகள் தனியார்மயமானால் வேலைவாய்ப்பு என்னவாகும்?
3 லட்சம் பேர் வேலை இழப்பு
சென்னை சுற்றியிருந்த ஹூண் டாய், டிவிஎஸ், போர்டு உள்ளிட்ட அனைத்து வாகன தொழிற்சாலை களும் மூடி கிடக்கின்றன. தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். தற் போதுள்ள தொழிற்சாலைகளும் இயங்க முடியாத நிலையில் உள்ளன. இந்தியா முழுவதும் தொழிற்சாலைகள் மூடிக் கொண்டி ருக்கும் நிலையில், அமெரிக்கா சென்று அங்குள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்க உள்ளதாக எடப்பாடி நாடகம் நடத்துகிறார்.
பணியில் முன்னுரிமை கேட்டு போராட்டம்
தமிழ்நாட்டில் நடக்கும் தேர்வில் தமிழ் மாணவன் தோற்கிறான். வெளி மாநிலத்தவர்கள் தேர்ச்சி பெறு கிறார்கள். அந்தளவிற்கு தமிழக மாண வர்கள் தரமில்லாமலா உள்ளனர். மோசடி செய்து வடமாநிலத்தவரை தமிழகத்தில் திணிக்கிற முயற்சி நடக்கிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், தொழிற் சாலைகளில் தமிழக இளைஞர்க ளுக்கு முன்னுரிமை கோரி விரைவில் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்திற்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தர்ராஜன் (வடசென்னை), எஸ்.கோபல் (திருவள்ளூர்) உள்ளிட்டோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமி நன்றி கூறினார். முன்னதாக தி.நகர் பகுதிச் செய லாளர் இ.மூர்த்தி வரவேற்றார்.